பதிவு செய்த நாள்
12
ஜன
2019
01:01
பழநி:தைப்பூச விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவிலில், வரும், 19 முதல், ஐந்து நாட்களுக்கு தங்க ரதம் புறப்பாடு கிடையாது என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழநி மலைக்கோவிலில் தினமும் இரவு, 7:00 மணிக்கு மேல், தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.தைப்பூச விழா, 15 முதல், 24 வரை நடக்கிறது. இந்நாட்களில் மலைக் கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், 19 - 23 வரை தங்க ரதம் புறப்பாடு கிடையாது. அதே சமயம், 19 மட்டும் கோவில் சார்பில், தங்க ரத புறப்பாடு நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.