திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் கடந்த 2018 செப்டம்பரில் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக பல கட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக அறிக்கையை முதல்வர் பினராயி விஜயன் கவர்னர் சதாசிவத்திடம் சமர்பித்தார்.
அதன் விவரம்: * சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என 2018 செப்டம்பர் 28-ல் தீர்ப்பு வெளியான நாள் முதல் கேரளாவில் பதட்டம் துவங்கியது.இது தொடர்பாக நடந்த வன்முறையில் ஈடுபட்டதாக 10,561 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்களில் 9,489 பேர் சங்க் பரிவார் அமைப்பினர்.
* கேரளாவில் இம்மாதம் ( ஜனவரியில்) நடந்த மூன்று பந்த் காரணமாக பொது சொத்துக்கள் சேதமடைந்தன. * கோயில் திறந்த நேரத்தில் ஏற்பட்ட வன்முறையில் போலீசாரால் 2,012 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. * கோயிலுக்குள் 30 பெண்கள் நுழைய முயன்றனர். அவர்களில் ஐந்து பேர் பெண் பத்திரிகையாளர்கள். * இந்து அமைப்பைச் சேர்ந்த பிநது, கனகதுர்கா என்ற இரு பெண்கள் கோயிலுக்குள் சென்றனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.