Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எம்பார் சுவாமி உற்சவ விழா சென்னை மைலாப்பூரில் ஸ்ரீ மஹா பெரியவாளின் மார்கழி உற்சவம் சென்னை மைலாப்பூரில் ஸ்ரீ மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பந்தளத்திலிருந்து திருவாபரணம் புறப்பட்டது
எழுத்தின் அளவு:
பந்தளத்திலிருந்து திருவாபரணம் புறப்பட்டது

பதிவு செய்த நாள்

13 ஜன
2019
12:01

சபரிமலை: மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவா பரணங்கள் அடங்கிய பவனி பந்தளத்திலிருந்து நேற்று புறப்பட்டது. நாளை மாலை 6:30 மணிக்கு பொன்னம்பல மேட்டில் மகரஜோதி காட்சி தருகிறது. சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. நாளை மாலை மகரவிளக்கு பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது. இதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

மகரவிளக்கு நாளில் பந்தளம் அரண்மனையில் இருந்து கொடுக்கப்படும் ஆபரணங்கள் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாரா தனை நடைபெறுகிறது. பந்தளம் அரண்மனையில் ஐயப்பன் வளர்ந்தார். சபரிமலை சென்ற பின் ஐயப்பனை காண பந்தளம் மன்னர் ஆபரணங்களுடன் சென்றார். அதை நினைவு படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பந்தளம் மன்னர் பிரதிநிதியுடன் திருவாபரண பவனி சபரிமலை வருவதாக வரலாறு கூறுகிறது. நேற்று காலை 5:00 மணிக்கு பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணங்கள் பந்தளம் சாஸ்தா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பகல் 12:30 மணிக்கு பவனி புறப்படுவதற்கான சடங்குகள் தொடங்கியது. அந்த நேரத்தில் ஆகாயத்தில் கருடன் வட்டமிட, சரணகோஷங்கள் முழங்க பகல் 1:00 மணிக்கு திருவா பரணபவனி புறப்பட்டது.

திருவாபரண பெட்டிகளை குருசாமி கங்காதரன் தலைமையில் 23 பேர் அடங்கிய குழுவினர் சுமந்து வருவர். நேற்று ஐரூர் புதியக்காவு தேவி கோயிலில் இந்த பவனி தங்கியது. இன்று ளாகா சத்திரத்தில் தங்கும். நாளை மாலை 5:30 மணிக்கு சரங்குத்திக்கும், 6:20 க்கு சன்னிதானமும் வந்து சேரும். காட்டுப்பாதையில் திருவாபரணங்கள் செல்வதால் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக கூடவே வருகின்றனர். மகரவிளக்குக்கு முன் னோடியாக நடைபெறும் சுத்திகிரியைகள் சன்னிதானத்தில் தொடங்கியது. நேற்று மாலை தீபாரா தனைக்கு பின்னர் பிராசாத சுத்தி கிரியைகள் நடந்தது. பிம்பசுத்திபூஜைகள் இன்று மதியம் உச்சபூஜைக்கு முன்னோடியாக நடைபெறும் என்றும், இந்த பூஜைகளுக்கு பின்னர் ஐயப்பனின் சிலையில் கலசாபிஷேகம் நடைபெறும் என்றும் தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறினார். இன்று மாலை 6:00 மணிக்கு பின்னர் பம்பையில், பம்பை விளக்கு நிகழ்ச்சி நடைபெறும். மூங்கில் கம்புகளில் கோபுரங்கள் வடிவமைத்து அதில் விளக்குகள் ஏற்றி பம்பை ஆற்றில் சரண கோஷத்துடன் மிதக்க விடுவர். நாளை மாலை 6:30 மணிக்கு பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரியும்.

மகர சங்கர பூஜை: சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் நேரத்தில் சபரிமலையில் நடைபெறும் விசேஷ பூஜை மகரசங்கரம பூஜை. இந்த ஆண்டு இந்த பூஜை நாளை இரவு 7:52 மணிக்கு நடக்கிறது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொடுத்துவிடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பன் சிலையில் அபிஷேகம் செய்யப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
சென்னை; ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. சென்னை, ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar