ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஒரு கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்தது. ராமேஸ்வரம் கோயிலில் 45 நாட்களுக்கு பிறகு நேற்று சுவாமி, அம்மன் சன்னதி மற்றும் பஞ்சமூர்த்தி சன்னதி முன்புள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கையை கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி முன்னிலையில் திருக்கல்யாண மண்டபத்தில் எண்ணினர். இதில் ஒரு கோடியே 15 ஆயிரத்து 762 ரூபாய் பணம், 62 கிராம் தங்கம், 3 கிலோ 950 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கலைசெல்வம், கண்ணன், கோயில் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.