Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ... பாரியூரில் பூமிதித்த குண்டத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் புதுப்பித்த 30 தீர்த்தங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2019
01:01

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் பசுமை ராமேஸ்வரம் அமைப்பினர் புதுப்பித்த 30 தீர்த்தங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அர்ப்பணித்தார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வெளியில் இருந்த 42 தீர்த்த குளம், கிணறுகள் 1964ல் ஏற்பட்ட புயலில் சேதமடைந்து புதைந்து போனது. இத்தீர்த்தங்களை விவேகானந்தா கேந்திரத்தின் பசுமை ராமேஸ்வரம் அமைப்பினர் 2014 முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபத்தில் கண்டு பிடித்து 5 கோடி ரூபாய் செலவில் 30 தீர்த்தங்களை புதுப்பித்தனர். இதனை பக்தர்கள், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நேற்று ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் 30 தீர்த்த கலசத்துடன் வேதவிற்பன்னர்கள் மந்திரம் முழங்க வருண யாக பூஜை நடந்தது. இப்பூஜையில் காலை 8:15 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் பங்கேற்று, அங்குள்ள மங்கள தீர்த்த குளத்தில் புனித நீரை ஊற்றி, மலர்துாவி தரிசனம் செய்தார். கலெக்டர் வீரராகவராவ், தென்மண்டல ஐ.ஜி.,சண்முகராஜேஸ்வரன், ராமநாதபுரம் டி.ஐ.ஜி.,காமினி, எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா, விவேகானந்தா கேந்திரம் துணை தலைவர் பாலகிருஷ்ணன், பசுமை ராமேஸ்வரம் அமைப்பு செயலர் வாசுதேவ், நிர்வாகிகள் ஸ்ரீதர், சரஸ்வதி, ராமேஸ்வரம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் கே.கே.அர்ச்சுணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

காலை 10:10 மணிக்கு ராமேஸ்வரத்தில் உள்ள மங்கம்மா சத்திரத்தில் 5 நிமிடம் தியானம் செய்த கவர்னர், காலை 10:35 மணிக்கு தீர்த்த அர்ப்பணிப்பு விழா நடக்கும் கோசுவாமி மடம் வந்து பேசினார். 11:50 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த கவர்னரை கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் வரவேற்றனர். சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் கவர்னர் பங்கேற்று தரிசனம் செய்தார். அங்கிருந்து ராமேஸ்வரம் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்திற்கு சென்றார். பகல் 12:35 மணிக்கு விருந்தினர் மாளிகை சென்று ஓய்வெடுத்த பின் மாலை 5:30 மணிக்கு மண்டபத்தில் இருந்து ரயிலில் சென்னை சென்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar