பதிவு செய்த நாள்
13
ஜன
2019
01:01
கோபிசெட்டிபாளையம்: பாரியூர் குண்டத்தில் உப்புக்கற்கள் கொட்டி, ஏராளமான பக்தர்கள் அம்மனை நேற்று வழிபட்டு சென்றனர். கோபி, பாரியூர் கொண்டத்துகாளியம்மன் குண்டம் தேர்த்திருவிழா, டிச., 27ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த 10ல், ஆயிரக்கணக்கான பக்தர்கள், பூமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், திருக்குண்டம் சமன் செய்யப்பட்டது. இதையடுத்து, தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அம்மன் கோவிலில் துவங்கிய தேரோட்டம், பெருமாள் கோவில் வீதி வழியாக, அமரபணீஸ்வரர் கோவில் அருகே நிறுத்தப்பட்டது. பின், தேர்நிலைக்கூடத்தில், நிலை சேர்க்க, இரு தேர்களும், நேற்று வடம் பிடித்து இழுத்தனர். அம்மன் மற்றும் விநாயகர் என இரு தேர்களும், தேர்நிலை கூடத்தில் நிலை நிறுத்தப்பட்டது. பின், குண்டத்தில், மிளகு கலந்த உப்புக்கற்களை கொட்டி, ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர். இதனால், பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவில் வளாகம் முழுக்க, பக்தர்கள் கூட்டம் நேற்று நிரம்பி வழிந்தது.