Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமகிருஷ்ணரின் 175 வது பிறந்த நாள் ... திட்டக்குடியில் வசிஷ்ட முனிவர் வாழ்ந்த பகுதியில் சித்தர்கள் ஆய்வு! திட்டக்குடியில் வசிஷ்ட முனிவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் வியக்க வைத்த மணிப்பூர் குழு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 பிப்
2012
10:02

சிதம்பரம்: சிதம்பரம் நாட்டியாஞ்சலியின் மூன்றாம் நாளான நேற்று, மணிப்பூர் மாநில ஜெயதிசேனா குழுவினரின் மணிப்புரி மற்றும் புங்சோளம் நாட்டியம், ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் இருந்தது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நாட்டியாஞ்சலியின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் முதல் நிகழ்ச்சியை குமாரப்பாளையம் நிருத்ய நடேச கலாலயா மாணவியர் பரதம் ஆடி துவக்கிவைத்தனர். அடுத்து திருச்சி கிருபா ஸ்ரீ வத்சன், பெங்களூரு ஸ்ரீ வித்யா கிருஷ்ணா, பிரபாகினி, சிதம்பரம் சிவசக்தி இசை நடனப்பள்ளி மாணவியர், சிதம்பரம் டாக்டர் சண்முகப்பிரியா ஆகியோர் பரத நாட்டிய நிகழ்ச்சியும், சென்னை உமா ரமேஷின் அப்பர் தேவார நாட்டியமும் நடந்தது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் மிதிலாலயா அகாடமி மாணவியர் பரதம், டில்லி விஜயலட்சுமி மோகினி ஆட்டம் நடந்தது. மணிப்பூர் ஆர்.கே.ஜெயதிசேனா குழுவினரின் மணிப்புரி மற்றும் புங்சோளம் நாட்டியம் நாட்டிய ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் மெய்சிலிர்க்க வைத்தது. இலங்கை ஸ்ரீராம் சிருஷ்டி பள்ளி மாணவியர் பரதம், டில்லி ராதிகா சாம்சன் ஒடிசி, சென்னை சரண்யா நிருத்ய வித்யாலயா மாணவியர் மற்றும் கரூர் சுஜாதா மாணவியர் பரதம் நடைபெற்றது. நிறைவாக புதுச்சேரி அபிநயவர்ஷிணி கலை மையத்தினரின் பரதநாட்டியம் நடந்தது. நேற்றைய நிகழ்ச்சியில், தங்க சபாபதி தீட்சிதர் தலைமை வகித்தார். கடலூர் மாவட்ட நீதிபதி உத்ராபதி, வீனஸ் பள்ளி தாளாளர் குமார் ஆகியோர் நாட்டியமாடிய மாணவிகளை வாழ்த்தி நினைவுப் பரிசு வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நவ. 25ல் ... மேலும்
 
temple news
தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக ... மேலும்
 
temple news
அவிநாசி; டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நாச வேலை தடுப்பு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரஷ்யா, கஜகஸ்தான், உக்ரைன் நாடுகளைச் சார்ந்த ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் உள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது. கிணத்துக்கடவு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar