Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சவால் மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) மகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

14 ஜன
2019
02:01

இந்த மாதம் ராகு 3-ம் இடத்தில் இருந்தும், குரு 7-ம் இடத்தில் இருந்தும் மாதம் முழுவதும் நற்பலன்  வழங்குவர்.  நட்புக்கிரகமான புதன் ஜன.16 வரையும், பிப்.1க்கு பிறகும் சாதகமான நிலையில் இருந்து நற்பலன் கொடுப்பார். இடைபட்ட காலத்தில் அவரால் நன்மை தர இயலாது. செவ்வாய் ஜன.31வரை சாதகமான இடத்தில் இருக்கிறார். அதன் பிறகு அவரால் நன்மையை எதிர்பார்க்க முடியாது. ஜன.31ல் இருந்து சுக்கிரன் சாதகமான இடத்துக்கு வந்து நன்மை செய்வார்.

குருவால் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எண்ணற்ற ஆடம்பர வசதிகள் கிடைக்கும். பணியாளர்களுக்கு உயர்வு உண்டாகும்.  

செவ்வாயால் மாதமுற் பகுதியில் பொருளாதார வளம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.  புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. புதனால் ஜன.15,16ல் நற்சுகம் உண்டாகும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும்.  சகோதரிகள் உதவிகரமாக செயல்படுவர். அவர்களால் பொன், பொருள் சேரும். சந்திரனால் ஜன.23,24ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.ஆனால் பிப்.8,9,10ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

பணியாளர்களின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.  மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஜன.22 முதல் பிப்.7 வரை தனியார் துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சிலர் இடமாற்றத்திற்கு ஆளாகலாம். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. கோரிக்கைகளை ஜன.31க்குள் கேட்டு பெறவும். அதன் பிறகு சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். பிப்.6,7ல் கூடுதல் பலன்கள் உண்டாகும். பணியிடத்தில் உங்கள் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

வியாபாரிகளுக்கு  லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்தலாம். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்களின் பிடியில் இருந்து பிப்.1க்கு பிறகு விடுபடுவர்.  ஜன.27,28,29ல் பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் பிறக்கும்.  

கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் ஏற்பட்ட பிரச்னை ஜன.30க்கு பிறகு மறையும். அதன் பின் அதே பெண்கள்  தவறை உணர்ந்து உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தங்களும் வந்து சேரும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் ஜன. 31 வரை வளர்ச்சிநிலை காண்பர். எதிர்பார்த்த பதவியும் கிடைக்கும்.  ஜன.25,26ல் வீண்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வர். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். ஜன.17 முதல் பிப்.1 வரை  புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். சிலர் கெட்ட சகவாசத்திற்கு ஆளாகலாம் கவனம். விவசாயிகளுக்கு சீரான மகசூல் கிடைக்கும். உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும்.
கால்நடை வளர்ப்பின் மூலம் அதிக ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க ஜன.30க்குள் வாய்ப்புண்டு.

பெண்கள் வாழ்வில் சீரான வளர்ச்சி காண்பர். பிள்ளைகளால் பெருமையும் கிடைக்கும். பணிக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். பிப்.1க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் வேலையில் நிம்மதி பெறுவர்.  சுய தொழில் புரியும் பெண்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். ஜன.30,31 ஆகிய நாட்கள் மகிழ்ச்சியாக அமையும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
ஜன.21,22ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம்.

உடல்நி லை சுமாராக இருக்கும். பயணத்தின் போது கவனம் தேவை. செவ்வாயால்  ஜன.31க்கு பிறகு விரயம் ஏற்படலாம்.  

* நல்ல நாள்: ஜன.17,18,21, 22, 27,28,29,30,31,
பிப்.6,7,8,9,10கவன நாள்: பிப்.1,2 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:7,8
* நிறம்: மஞ்சள், நீலம்

* பரிகாரம்:
●  தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
●  செவ்வாய்க்கிழமையில் கேதுவுக்கு அர்ச்சனை
●  சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நடைபெற்ற ஆனி திருமஞ்சன தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.ஆதியும் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது. இன்று காலை 4:00 ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கம்பம் ஊன்றும் விழாவிற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar