Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... ராமேஸ்வரத்தில் அந்தோணியார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சவால்
எழுத்தின் அளவு:
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சவால்

பதிவு செய்த நாள்

14 ஜன
2019
02:01

அதிக உழைப்பும்,  விடா முயற்சியும் தேவைப்படும் மாதமாக இது அமையும். உங்கள் திறமைக்கு சவால் விடும் காலம் இது. பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற நிலையில் உள்ளன. இதனால் எந்த ஒரு செயலையும் அதிக முயற்சி எடுத்தே முடிக்க வேண்டியதிருக்கும். வீண்அலைச்சல் அதிகரிக்கும் வெளியூரில் தங்கவும் நேரிடலாம். ஆனால் மாத பிற்பகுதியில் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். அதற்கு காரணம் செவ்வாய் பிப்.1ல் சாதகமான இடமான மேஷத்திற்கு வருகிறார். புதன் ஜன.17ல் இருந்து பிப்.1 வரை சாதகமாக இருந்து நற்பலன் கொடுப்பார்.   

பிப்.1 முதல் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லை மறையும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். புதிய வீடு, மனை வாகனம் வாங்க யோகம் வரும்.

புதனால் ஜன.17 முதல் பிப்.1 வரை முயற்சியில் வெற்றி கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். அவர்களால் பொன், பொருள் சேரும்.  

ஜன.15,16 ல் கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். அதன் பிறகு ஆடம்பர வசதிகள் பெருகும். மாதத்தின் பிற்பகுதியில் கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை பிறக்கும்.
ஜன.15,16,பிப்.11,12ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜன.25,26ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம்.

தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். சகஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். அரசு ஊழியர்கள் வேலையில் சற்று கவனமாக இருக்கவும். பிப்.8,9,10ல் எதிர்பாராத நன்மை காண்பீர்கள். வேலையில் பொறுமை தேவை  

தொழில், வியாபாரத்தில் சூரியன் சாதகமற்று இருப்பதால் அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பது அரிது வரவு, செலவு கணக்கை சரியாக வைக்கவும். ஜன.30,31ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வு ஜன.30க்கு பிறகு மறையும். ஆனால்
அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லை குறுக்கிடலாம். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். ஜன.31க்கு பிறகு புதிய பதவி பெற வாய்ப்புண்டு.

மாணவர்களுக்கு புதன் பக்கபலமாக இருப்பதால் கல்வியில் வளர்ச்சி காணலாம். தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.  போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். பிப்.1க்கு பிறகு சிலர் தீய மாணவர்களோடு சேர வாய்ப்புண்டு. கவனம் தேவை.

விவசாயிகளுக்கு வளம் கொழிக்கும் மாதமாக இருக்கும். விளைச்சல் அதிகரிக்கும். வருமானம் உயரும்.

ஜன.31க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் நிலை உருவாகலாம். எதிர்பார்த்ததை விட அதிக மகசூல் கிடைக்கும்.  கால்நடை வகையிலும்  எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.

பெண்களுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி
தேடி வரும். பிப்.1ல் இருந்து சிலருக்கு உயர்பதவி கிடைக்க வாய்ப்புண்டு. சுய தொழில் புரியும் பெண்கள் சிறப்பான பலனைப் பெறுவர். ஜன.23,24ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம் பிப்.1,2 குதூகலமான நாட்களாக அமையும். உடல்நலம் சுமாராக இருக்கும்.
செவ்வாயால் ஏற்பட்ட உஷ்ணம், தோல், தொடர்பான நோய் ஜன.31க்கு பிறகு மறையும்.
பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

* நல்ல நாள்: ஜன.15,16,19, 20,23,24,30,31,பிப்.1,2,8,9,10,11,12
* கவன நாள்: பிப்.3,4,5 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண் 1,5.
* நிறம்: பச்சை,சிவப்பு

* பரிகாரம்:

●  நாளும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
●  வெள்ளிக்கிழமையில் நாகதேவதை வழிபாடு
●  சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் தீபம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar