Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ஆதாயம் துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) சுபநிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) சுபநிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

14 ஜன
2019
03:01

சுக்கிரன், ராகு இந்த மாதம் முழுவதும் சாதகமாக நின்று நற்பலன் தருவர். புதன் ஜன.16 வரையும், பிப்.1க்கு பிறகும் நன்மை தருவார். ராகு, சுக்கிரனால் ஏற்பட்ட இடர்ப்பாடுகள் அனைத்தும் இடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவிய குழப்பத்திற்கு நல்ல தீர்வு கிடைக்கும். பொன், பொருள் சேரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் உறுதுணையாக  இருப்பர்.

குடும்பத்தின் தேவை பூர்த்தியாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஜன.16க்கு பிறகு கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. சிறு பிரச்னை வந்து மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவும். ஜன.25,26ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். ஜன.21,22ல் உறவினர் வருகையும், அவர்களால் உதவியும் கிடைக்கும். ஆனால் பிப்.1,2 ல் உறவினர் வகையில் வீண்விரோதம் வரலாம். எனவே சற்று ஒதுங்கியிருப்பது நல்லது. பிப்.1க்கு பிறகு புதியமுயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறும்.
கணவன், மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு ஜன.16க்கு பிறகு வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை ஆனால் ஜன.19,20ல் முன்னேற்றமான சம்பவங்கள் நடக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் பிப்.1க்கு பிறகு வீடு திரும்புவர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலைப்பளு குறையும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடையிருக்காது. பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு அதிக சிரத்தை எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும்.

வியாபாரிகளுக்கு ராகு, தொழில்விருத்தியை தந்து கொண்டிருக்கிறார். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் மூலம் லாபம் உயரும். முக்கிய முடிவுகளை ஜன.16க்குள் செய்யவும்.  தொழில்ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். சூரியனால் பகைவர் இடையூறுகள் அவ்வப்போது தலைதூக்கும். இருப்பினும் ராகுவின் பலத்தால் எளிதில் முறியடிப்பீர்கள். பிப்.6,7ல் பணவரவு இருக்கும். ஜன.23,24,27,28,29ல் பணவிரயம் ஏற்படலாம்.

கலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானம் உயரும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். தொண்டர் மத்தியில் புகழ் பெறுவர்.

மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். போட்டி பந்தயங்களில் பங்கேற்று வெற்றியடைவர். ஜன.17 முதல் பிப்.1 வரை புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது
விவசாயிகள் எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் காண்பர்.
புதிய சொத்து வாங்கும் எண்ணம் பிப்.1க்கு பிறகு கைகூடும். கால்நடை வளர்ப்பின் மூலம் கூடுதல் ஆதாயம் கிடைக்கும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள் வாழ்வில் சிறப்பான பலனடைவர்.  குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர் .பிப்.1க்கு பிறகு  தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். தோழிகள் உதவிகரமாக செயல்படுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.  சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும் அனுசரணையும் வந்து சேரும். சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கப் பெறுவர். ஜன.30,31ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிப்.8,9,10ல் சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். உடல்நிலை அதிருப்தியளிக்கும்.

* நல்ல நாள்: ஜன.19,20, 21,22,25,26,30,31,
பிப்.6,7,8,9,10
* கவன நாள்: ஜன.15,16, பிப்.11,12 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 5,6
* நிறம்: வெள்ளை, சிவப்பு

* பரிகாரம்:

●  ஞாயிறன்று காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
●  வெள்ளியன்று ராகுகாலத்தில் துர்க்கை வழிபாடு
●  சனிக்கிழமையில் அனுமனுக்கு துளசிஅர்ச்சனை

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை ... மேலும்
 
temple news
சென்னை ; திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar