பழநி: தைமாத கார்த்திகையை முன்னிட்டு, பழநி திருஆவினன்குடி கோயிலில் உச்சிகால பூஜையில் குழந்தை வேலாயுதசுவாமி, சனி பகவான், தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
மாலையில் 108 திருவிளக்குபூஜையில் பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கபட்டது.தைப்பூசவிழாவை முன்னிட்டு கிழக்குரதவீதி பெரியநாயகியம்மன் கோயில் இரவில் வெள்ளி ஆட்டுகிடா வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை புறப்பாடு நடந்தது.