பதிவு செய்த நாள்
17
ஜன
2019
02:01
நாமக்கல்: நாமக்கல்லில், தை மாத கிருத்திகையை முன்னிட்டு, முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
நாமக்கல், மோகனூர் சாலையில் அமைந்துள்ள பாலதண்டாயுத பாணி சுவாமி கோவிலில், நேற்று (ஜன., 16ல்) தை கிருத்திகை நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு காலை, 8:00 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது.
மூலவர் பாலதண்டாயுதபாணிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது. பின்னர், வெள்ளி கவசம் சாத்தப்பட்டு செவ்வரளி, மனோரஞ்சிதம், ரோஜா மற்றும் மல்லிகை மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, ராஜ அலங்காரத்தில் பாலதண்டாயுதபாணி பக்தர்களுக்கு அருள் பாலிதார். தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக, சிறப்பு யாக வேல்வி நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.