பதிவு செய்த நாள்
17
ஜன
2019
03:01
தர்மபுரி: தை மாத கிருத்திகையையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில்உள்ள, முருகன் கோவில்களில், நேற்று (ஜன., 16ல்) சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது.
இதை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி., ரோடு, சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில், மூலவருக்கு, நேற்று (ஜன., 16ல்) காலை, 6:00 மணிக்கு, பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். காலை, 10:30 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன், உற்சவ மூர்த்தி, எஸ்.வி., ரோடு, காந்தி சாலை, பி.ஆர்.,சீனிவாசராவ் தெரு, சுண்ணாம்புகார வீதி, கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்று, கோவிலை வந்தடைந்தது. இதேபோல், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், அன்னசாகரம் சக்தி விநாயகர் சுப்பிரமணியர் சுவாமி கோவில், நெசவாளர் காலனி முருகன்
கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு முருகன் கோவில்களில், நேற்று (ஜன., 16ல்), சிறப்பு பூஜை நடந்தது.