Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... 2,300 பெண்கள் ஹஜ் பயணம் 2,300 பெண்கள் ஹஜ் பயணம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கம்பம் நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழுவ பொங்கல்
எழுத்தின் அளவு:
கம்பம் நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழுவ பொங்கல்

பதிவு செய்த நாள்

17 ஜன
2019
05:01

கம்பம்: பசுக்களை தெய்வமாக வணங்கும் ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள், நேற்று காலை நந்தகோபாலன்தம்பிரான் மாட்டுத் தொழுவத்தில் குவிந்த நிலையில், பெண்கள் பொங்கல் வைத்து பசுக்களை வணங்கினர். கம்பம் நந்தகோபாலன் கோயில், நகரின் மேற்கு திசையில் உள்ளது. இங்கு சுவாமி விக்கிரகங்கள் கிடையாது. கருவறையில் ஸ்தம்பம் ஒன்று மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. மற்றபடி இங்கு பூஜை புனஸ்காரம் அனைத்தும் இந்த கோயிலின் பட்டத்துக் காளைக்கு மட்டுமே நடைபெறும். ஒக்கலிக சமுதாயத்தின் சார்பில் மாட்டுப் பொங்கல் அன்று இங்கு விழா கொண்டாடப்படும்.
 
நேற்று காலை ஒக்கலிகர் நாட்டாண்மை காந்தவன் தலைமையில், ஸ்தம்பத்திற்கு முதலில் பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னர் பட்டத்துக் காளைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. முழு அலங்காரத்தில் நின்றிருந்த பட்டத்துக் காளையை பார்க்க ஆயிரக்கணக்கில் பொது மக்கள் திரண்டனர்.  பின்னர் கோயில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடந்தது. நுாற்றுக்கணக்கில் பெண்கள் பொங்கல் வைத்தனர். பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினார்கள். குறிப்பாக இப்பகுதியில் வசிக்கும் எல்லா சமூகத்தினரும் தங்களின் வேண்டுதலுக்காக தங்களின் வீடுகளில் பசுக்கள் ஈணும் கன்றுகளை இங்கு அன்பளிப்பாக தருவது வழக்கம். நேற்று  காலையும் பலர் தங்களின் கன்றுக் குட்டிகளை கோயிலிற்கு தானமாக வழங்கினர். இதில் நாட்டு மாடுகளின் கன்றுகள் மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். பிற கலப்பின பசுக்களை கோயில் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளாது.  தொழுவத்தில் அடைக்கப்பட்டுள்ள நுாற்றுக்கணக்கான பசு மற்றும் காளை மாடுகளை அதிகாலையில் குளிப்பாட்டி, நெற்றியில் குங்குமம் இடப்பட்டது. ஏராளமானவர்கள் கரும்பு சோகை, புல், கரும்பு போன்றவைகளை வாங்கி, அவற்றுக்கு உண்பதற்கு வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி மாதத்தின் கடைசி நாள். வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதியுடன் சேர்ந்து வருவது மிக சிறந்ததாக ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம், ராம ஏகாதசியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறக்கிறது. நாளை காலை கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar