பதிவு செய்த நாள்
18
ஜன
2019
11:01
கிருஷ்ணகிரி, விஸ்வரூப கோதண்டராமர் சிலை, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் இருந்து, இன்று புறப்படுகிறது.கர்நாடக மாநிலம், ஈஜிபுரா பகுதியில், 108 அடி உயரத்தில், விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்கப்படுகிறது. சிலை செய்ய, 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பாறை, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, கொரக்கோட்டை மலையில் இருந்து, 3 லட்சம் கிலோ எடையில் வெட்டி எடுக்கப்பட்டது.இதில், கோதண்டராமரின் முகம் மட்டும் வடிவமைத்து, டிச., 7ல், 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில், சிலை புறப்பட்டது. பல்வேறு இடையூறுகளை தாண்டி, ஜன., 16ல், கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான, சிங்காரப்பேட்டைக்கு வந்தது.இங்குள்ள பாலாறு அணை பாலத்தை, லாரி கடக்க முடியாது. எனவே, பாலத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையறிந்த மக்கள், கோதண்டராமர் சிலையை வணங்கிச் செல்கின்றனர்.அருகே உள்ள, தற்காலிக தரைப்பாலத்தின் வழியாக, இன்று புறப்பட்டு, இரண்டு நாளில், ஊத்தங்கரை வந்தடையும்.