பதிவு செய்த நாள்
18
ஜன
2019
02:01
வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா, நேற்று (ஜன., 17ல்) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 13ம் ஆண்டு தைப்பூசத் திருவிழா, கொடியேற்றத் துடன் துவங்கியது. முன்னதாக காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமமும், 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், 7:00 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு தைப்பூச விழாக்குழு தலைவர் வள்ளிக்கண்ணு தலைமையில் திருக்கொடி ஏற்றப்பட்டது. விழாவில், வரும், 20ம் தேதி மாலை முருகன், வள்ளி, தெய்வானைக்கு திருக் கல்யாணம் நடக்கிறது. 21ம் தேதி காலை, 11:00 மணிக்கு பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக செல்கின்றனர். அதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தைப்பூச விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.