பதிவு செய்த நாள்
19
ஜன
2019
11:01
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வருஷாபிஷேக பூஜைகள் நேற்று முதல் துவங்கியது.இதை முன்னிட்டு நேற்று காலை 8:00 மணிக்கு, நிறைதாழ்ந்த பந்தல் மண்டபத்தில் ஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளினர். அப்போது மஹாசாந்தி ேஹாமம், திருமஞ்சனம், சிறப்பு பூஜைகளை பாலாஜி பட்டர் செய்தார்.
திரளான பக்தர்கள் ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசித்தனர். மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணிவரையிலும் புண்யாகவாசனம், திருவாராதனம், அங்குரார்ப்பணம், சாத்துமுறை, தீர்த்தகோஷ்டி நடந்தது.தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் இளங்கோவன்,பட்டர்கள் வேதபிரான் அனந்தராமன், ரகு, பாலாஜி, மணியம் கோபி, ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமஷே் பங்கேற்றனர்.இன்று (ஜன.19) காலை 6:50 மணிமுதல் மதியம் 2 :00வரை 108 கலசதிருமஞ்சனம், நாளை (ஜன.20) காலை 5:30 மணிக்கு விசஷே திருமஞ்சனம், காலை 7:15 மணி முதல் லட்சார்ச்சனை நடக்கிறது.