உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் வடக்குப்பகுதியில் பழமையும், புரதான சிறப்பும் பெற்ற வராகி அம்மன் கோயில் உள்ளது. இங்கு சுயம்பு வடிவாக மூலவர் அம்மன் காட்சி தருகிறார். செவ்வாய், வெள்ளி உள்ளிட்ட விசஷே நாட்களில் பச்சை விரலி மஞ்சளை பெண்கள் அம்மியில் அரைத்து கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். குழந்தை வரம், கடன் பிரச்னை, பில்லி சூன்யம் உள்ளிட்டவைகளை தீர்ப்பதற்காக பக்தர்களால் அதிகளவில் நேர்ச்சை செய்யப்படுகிறது. நாள்தோறும் சுற்றுவட்டார, வெளியூர் பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். கடந்த 2018 பிப்., 5ல் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான வருடாபிஷேக விழா ஜன., 26 (சனிக் கிழமை) காலை 10:30 முதல் பகல் 12:00 மணி வரை நடக்கிறது. பகலில் அன்னதானமும் நடைபெறும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் பரம்பரை தர்மகர்த்தா ராஜராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் ராமு, பஷே்கார் கண்ணன் மற்றும் பவுர்ணமி விழா கமிட்டியினர், கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.