பதிவு செய்த நாள்
19
ஜன
2019
11:01
கிருஷ்ணகிரி: கோதண்டராமர் சிலை, சாமல்பட்டி ரயில்வே தரைப்பாலத்தை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், ஈஜிபுரா பகுதியில், 108 அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்கப்படுகிறது.
சிலை செய்ய, 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட கல், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை மலையில் இருந்து, 350 டன் எடையில் வெட்டி எடுக்கப்பட்டது. இதில் முகம் மட்டும் வடிவமைத்து கடந்த மாதம், 7ல், 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் புறப்பட்டது. இந்த லாரி பல்வேறு இடையூறுகளை கடந்து, 16ல் கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாறு பாலத்தின் அருகில் நிறுத்தப்பட்டது. சிலையை காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கிருந்து பயணத்தை தொடர, இடையூறாக இருக்கும் சில கட்டடங்கள் இடிக்க வேண்டும். மேலும், ஊத்தங்கரை பகுதியில், குறுகிய சாலை என்பதால் பேரூராட்சி நிர்வாகம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ரவுண்டானாவை சிறிதாக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். இருந்தாலும், சாமல்பட்டி ரயில்வே தரைப்பாலத்தை கடக்க இயலுமா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.