பதிவு செய்த நாள்
19
ஜன
2019
12:01
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் தேரோட்டம், நேற்று விமரிசையாக நடந்தது.
திருஊரகம் என அழைக்கப்படும், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் தை மாதத்தில், பிரம்மோற்சவம், 10 நாட்கள் நடைபெறும். அதன்படி, இந்தாண்டு உற்சவம், ஜன., 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.அன்று முதல், தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய பெருமாள், நான்கு ராஜ வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஜன., 14ல், காலை கருட சேவையும், மாலையில், ஹனுமந்த வாகன உற்சவம் நடந்தது. ஏழாம் நாளான நேற்று காலை, தேரோட்டம் நடந்தது.
காலை, 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் உலகளந்த பெருமாள் எழுந்தருளினார். 8:10 மணிக்கு, மேளதாளம் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேர் அசைந்து ஆடிய படி புறப்பட்டது.நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்று, காலை, 10:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. வழி நெடுகிலும், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமியை வழிபட்டனர்.வரும், 21ல், த்வஜா அவரோகணத்துடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.