Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமரம்பேடில் உள்ள, பெருமாள் கோவில் ... செம்பாக்கம் பொன்னம்பலம் சுவாமிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை சென்ற பெண்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2019
01:01

புதுடில்லி: கேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த இரு பெண்களுக்கு, 24 மணி நேர பாதுகாப்பு வழங்கும்படி, அந்த மாநில அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளாவில், பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து, உச்ச நீதிமன்றம், சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

ஹிந்து அமைப்பினரும், பக்தர்களும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இருப்பினும், கேரளாவைச் சேர்ந்த, கனகதுர்கா, 44, பிந்து, 42, ஆகிய பெண்கள், மாநில அரசு மற்றும் போலீஸ் உதவியுடன், அய்யப்பன் கோவிலுக்கு சென்று, தரிசனம் செய்தனர்.இந்த செய்தி, மாநிலம் முழுவதும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. மாநில அரசின் செயல்பாட்டை கண்டித்து, பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. அதை பொருட்படுத்தாத மாநில அரசு, சபரிமலைக்கு செல்ல விரும்பும் பெண்களை, ரகசியமாக அழைத்துச் சென்று, தரிசனம் செய்ய உதவி வருகிறது.இதுவரை, அந்த கோவிலில், 51 பெண்கள் தரிசனம் செய்துள்ளதாக, மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கனகதுர்கா, பிந்து ஆகியோருக்கு, அவர்களது குடும்பத்தினரும், உள்ளூர் மக்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், பதற்றம் நிலவியது. கனகதுர்காவை, அவரது மாமியார் தாக்கியதால், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.இந்நிலையில், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், கனகதுர்கா, பிந்து சார்பில் அவர்களது வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் சென்றால், தூய்மைப்படுத்தும் சடங்குகள் செய்யக்கூடாது. அந்த கோவிலுக்கு செல்லும் பெண்களை, எந்த வகையிலும் தடுக்கக் கூடாது என, கூறப்பட்டிருந்தது.

மேலும், சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, சிலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், எல்.என்.ராவ், தினேஷ் மகேஸ்வரி அடங்கிய அமர்வு முன், நேற்று (ஜன., 18ல்) விசாரணைக்கு வந்தது.மனுக்கள் மீதான வாதத்துக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விபரம்:கனகதுர்கா, பிந்து ஆகிய இரு பெண்களுக்கும், கேரள மாநில அரசு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். பிற விஷயங்கள் குறித்து விவாதம் நடத்த, நாங்கள் விரும்பவில்லை.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி லட்டு சர்ச்சையை தொடர்ந்து ஏழுமலையானுக்கு உகந்த ரோகிணி நட்சத்திரமான இன்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அலங்காரகுளம் அருகே அமைந்துள்ள மயூரநாதர் பாம்பன் சுவாமி கோயிலில் மாதந்தோறும் ... மேலும்
 
temple news
கோவை; பெரியநாயக்கன் பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
சென்னை; திருப்பதி பிரசாதத்தின் தரம் குறைந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே மேலபசலை சிவன் கோயிலில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் 108 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar