பதிவு செய்த நாள்
19
ஜன
2019
01:01
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், வரும், 21, 22ல் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
திருக்கழுக்குன்றத்தில், புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை சார்ந்த, சங்கு தீர்த்த குளம் மிகச்சிறப்புடையதாகும். இதில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறக்கும் என்பது ஐதீகம்.
ஆண்டுதோறும் தை பூசத்தன்று இன்று (ஜன., 19ல்) நடைபெறும் தெப்பத் திருவிழா, இந்தாண்டு, ஜன., 21ல் சங்கு தீர்த்த குளத்திலும், 22ல் ரிஷப தீர்த்த குளத்திலும் நடைபெறு கிறது.சங்கு தீர்த்த குளத்தில், மலர் அலங்காரத்தில், வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன் மூன்று முறை சுற்றி வருவர்.அதுபோல, தாழக்கோவிலில் உள்ள ரிஷப தீர்த்த குளத்தில், ஒன்பது முறை சுற்றி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், 21ம் தேதி தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. விழா ஒட்டி, பால்குட விழா ஊர்வலம் காலை நடைபெறுகிறது. இரவு, 7:00 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.