பதிவு செய்த நாள்
19
ஜன
2019
02:01
சென்னை:தை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, (ஜன., 18ல்) சென்னை மற்றும் புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில், பெண்கள் வழிபாடு நடத்தினர்.ஒவ்வொரு குடும்பத் திற்கும், ஒரு பெண் குல தெய்வம் உண்டு. பல தலைமுறைகளாக, ஒவ்வொரு ஆண்டும் ஆடி, தை மாதங்களில், குல தெய்வம் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து, மாவிலக்கு போட்டு வழிபாடு நடத்துவது, வழக்கத்தில் உள்ளது.
தை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று (ஜன.,18ல்) சென்னை மற்றும் புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில், ஏராளமானோர் குவிந்தனர்.அதிகாலை முதல் புற்றுக்கு பால் வார்த்தல், பொங்கல் வைத்து, மாவிலக்கு போட்டு வழிபாடு நடத்தினர்.பெரும்பாலான கோவில் களில், தை முதல் வெள்ளியை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.