பதிவு செய்த நாள்
19
ஜன
2019
02:01
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, கழுகரை காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஜன., 20ல்) நடக்கிறது.மடத்துக்குளம் தாலுகா கழுகரையில், காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று (ஜன., 19ல்) காலை, 7:31 மணிக்கு விக்னேசுவர பூஜையுடன் தொடங்குகிறது. பின், வருண, தனபூஜை, மஞ்சகாவ்யம், கணபதி ஹோமம் நடக்கிறது.மாலை 5:30 மணிக்கு வாஸ்துசாந்தி, யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜைகள், நடக்கின்றன. நாளை (20ம் தேதி) காலை, 6:00 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, கோ பூஜையும், காலை, 7:30 மணிக்கு, தீபாராதனையும், கும்பாபிஷேகமும் நடக்கிறது.கோவில் வளாகத்திலுள்ள ஏகாம்பரேஸ்வர சாமி, சுப்பிரமணியசாமி, கருப்பணசாமிக்கும் இதே நேரத்தில் கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.