பதிவு செய்த நாள்
19
ஜன
2019
02:01
உடுமலை:உடுமலை அருகேயுள்ள சோமவாரபட்டியில், கால்நடைகளை காக்கும் தெய்வமான ஆல்கொண்டமால் கோவில் உள்ளது.இக்கோவில், ஆண்டு திருவிழாவான, தமிழர் திருநாள் திருவிழா கடந்த மூன்று நாட்களாக நடந்தது. கால்நடைகள் பிணி தீர்க்க நேர்த்திக்கடனாக உருவாரங்கள் செலுத்தியும், பால் கொண்டு வந்து அபிஷேகமும் செய்தனர்.
மூன்று நாட்கள் திருவிழாவில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக, மூன்று இடங்களில் தற்காலிக உண்டியல்கள் வைக்கப்பட்டன.நேற்று 19 ல், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹர்சினி மற்றும் பக்தர்கள் முன்னிலையில், உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.மூன்று லட்சத்து, 27 ஆயிரத்து, 414 ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.