பதிவு செய்த நாள்
19
ஜன
2019
02:01
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, பாப்பன்குளம் பாலதண்டாயுதபாணி, கோவிலில், தைப்பூச பால்காவடி திருவிழா வரும் 21ம் தேதி நடக்கிறது.மடத்துக்குளம் அருகே பாப்பான் குளம் பஸ் நிறுத்தம் அருகில், பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆயிரம்படி பால் அபிஷேகம் செய்யும் பால்காவடி திருவிழா நடக்கிறது.
இந்நிகழ்ச்சி வரும் 21ம் தேதி காலை, 6:00 மணிக்கு வெள்ளனூர் அம்மன் கோவிலில் மங்கள இசையுடன் தொடங்குகிறது. பின், விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், புண்யாகவாசனம், பஞ்ச கவ்யபூஜை, துர்காலட்சுமி ஹோமம், கோ பூஜை, பால் குடங்கள் பூஜையும், காலை 9:00 மணிக்கு, பால்காவடி புறப்பட்டு வீதி உலா வருதலும் நடக்கிறது.காலை, 10:00 மணிக்கு ஞான விநாயகர், தண்டாயுதபாணிக்கு ஆயிரம்படி பால் அபிஷேகமும், ராஜவெள்ளி கவச அலங்காரமும், பகல் 11:00 மணிக்கு தூப, தீப நைவேத்தியம், மகாதீபாரதனை தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது.கோவில் நிர்வாகிகள் கூறுகையில், பாப்பான்குளம் பகுதியைச்சார்ந்த பால் உற்பத்தியாளர்கள், ஆயிரம் படி பால் வழங்குகின்றனர். இந்த சிறப்பு அபிஷேகம் தவிர, வரும் 22ம் தேதி இரவு 8:00 மணிக்கு, செவ்வாய் ஹோரையில் வலம்புரி சங்கில் பால் அபிஷேகம் நடக்கிறது என்றனர்.