பதிவு செய்த நாள்
19
ஜன
2019
02:01
கடலூர்: கடலூர் வலம்புரி அற்புத விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 21ம் தேதி நடக்கிறது.அதனையொட்டி, நேற்று (ஜன., 18ல்) காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி நடந்தது.
இன்று (ஜன., 19ல்) காலை 8:00 மணிக்கு மகாலட்சுமி ஹோமம், மாலை 5:00 மணிக்கு அங்குரார்ப்பணம், கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது. நாளை 20ம் தேதி காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, விசேஷ சந்தி, ஹோமங்கள், மாலை 4:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது.
21ம் தேதி காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, 9:00 மணிக்கு யாத்ராதானம், 9:15 மணிக்கு கடம் புறப்பாடு, 9:30 மணிக்கு விமான ஸ்தூபி கும்பாபிஷேகம், 9:45 மணிக்கு மூலஸ்தானங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பகல் 12:00 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, மாலை 5:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.