பதிவு செய்த நாள்
19
ஜன
2019
02:01
பாகூர்: சோரியாங்குப்பம் தென் பெண்ணையாற்றில் இன்று (19ம் தேதி) ஆற்று திருவிழா (நதி தீர்த்தவாரி) நடக்கிறது.பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பம் தென் பெண்ணையாற்றில், பொங்கல் பண்டிகையின் 5வது நாளன்று, ஆற்று திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஆற்றுத் திருவிழா இன்று (19ம் தேதி) நடக்கிறது.இதில், பாகூர், சேலியமேடு, அரங்கனூர், நிர்ணயப்பட்டு, குருவிநத்தம், இருளஞ்சந்தை, குடியிருப்புபாளையம், கரைமேடு, உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுவாமிகள் எழுந்தருளி, ஆற்றில் நீராடி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளன. பாதுகாப்பு பணியில், 3 இன்ஸ்பெக்டர்கள், 5 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட போலீசார், மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட உள்ளனர்.