ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குழந்தை வேலப்பர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2019 02:01
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குழந்தை வேலப்பர் கோயிலில் பக்தர்கள் அதிகமாக இருந்ததால் தரிசனம் செய்ய தாமதமானது. பழநியில் நடைபெறவிருக்கும் தைப்பூசத்தில் கலந்து கொள்ள காரைக்குடி, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிகமாக செல்கின்றனர். நேற்று (ஜன., 19ல்) இவர்கள் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநிக்கு கிளம்பினர்.
பழநி ரோட்டில் உள்ள குழந்தை வேலப்பர் கோயிலுக்கு சென்று அனைவரும் வழிபட்டு சென்றனர். இதனையொட்டி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் அதிகமாக குவிந்ததால் குழந்தை வேலப்பரை தரிசிக்க நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.