பதிவு செய்த நாள்
19
ஜன
2019
02:01
ஓமலூர்: தைப்பூசத்துக்கு, கைலாசநாதர் கோவில் தேர் தயார்படுத்தப்படுகிறது. தாரமங்கலம், கைலாசநாதர் கோவில் அருகே, பத்ர காளியம்மன் கோவில் உள்ளது. அங்கு, தை மாத பவுர்ணமிக்கு முன் வரும் அமாவாசையில் தேரோட்டம் நடக்கும், பின், பவுர்ணமி தைப்பூச நாளில், கைலாசநாதர் கோவில் தேர், பத்ரகாளியம்மன் தேர் ஆகியவை, ஒன்றாக செல்லும். அம்மன் கோவில் புனரமைப்பு பணியால், 12 ஆண்டுகளாக, இரு கோவில்களில் தேரோட்டம் நடக்கவில்லை. கடந்தாண்டு, கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்ம் நடந்ததால், தேரோட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அதனால், கடந்த, 6ல், அம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. தைப்பூச நாளான, வரும், 21 மதியம், 3:00 மணி; 22 மாலை, 4:30 மணி; 23 காலை, 9:00 மணிக்கு என, மூன்று நாட்களும், தேரை வடம் பிடித்து, திரளான பக்தர்கள், கோவிலைச் சுற்றிவலம் வருவர். பல ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம் நடக்கவுள்ளதால், தேரை பொலிவுபடுத்தும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.