செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.செத்தவரை-நல்லாண்பிள்ளை பெற்றாள் மோன சித்தர் ஆசிரமத்தில் உள்ள மீனாட்சியம்மன் உடனாகிய சொக்கநாதர் கோவிலில் பிரதோஷத்தை யொட்டி நேற்று (ஜன., 18ல்) காலை சொக்கநாதர், மீனாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 5:00 மணிக்கு சிவஜோதி மோன சித்தர் தலைமையில் கோபூஜையும், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
செஞ்சி காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலை 5:00 மணிக்கு நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம், விசஷே திரவிய அபஷேகம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு மாக தீபாராதனை நடந்தது.பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அருணாச்சலேஸ்வரர், அபிதகுஜாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். நந்திஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது.முக்குணம் முக்குன்றநாத உடையார் கோவிலில் முக்குன்றநாதர், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலை 6 மணிக்கு சாமி கோவில் உலா நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பெருவளூர் கோகிலாம்பாள் உடனுறை கோட்டீஸ்வரர் கோவிலில் கோட்டீஸ்வரர், கோகிலாம்பாள் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.