பதிவு செய்த நாள்
19
ஜன
2019
03:01
கூரம்: கூரத்தாழ்வான் கோவிலில், 25ம் தேதி, தேரோட்டம் நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில், ஆதிகேசவப்பெருமாள், கூரத்தாழ்வான் கோவில் உள்ளது. இங்கு, ஆண்தோறும் கூரத்தாழ்வான் அவதார உற்சவம் நடைபெறும்.
நடப்பாண்டு, 1009வது அவதார உற்சவத்தை முன்னிட்டு, திருவிழா கடந்த, 13ம் தேதி துவங்கியது. இதில், இரவு நேரங்களில், பல விதமான வாகனங்களில், கூரத்தாழ்வான் எழுந்தருளுவான்.
இக்கோவிலின் தேரோட்டம், ஜன., 25ம் தேதி நடைபெற உள்ளது.