பதிவு செய்த நாள்
20
ஜன
2019
11:01
திருத்தணி: வள்ளலார் கோவிலில், நாளை, தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா நடக்கிறது.திருத்தணி, பெரியார் நகர், அரசு போக்குவரத்து பணிமனை எதிரில், திருஅருட்பிரகாச வள்ளலார் கோவில் உள்ளது. இக்கோவிலில், நாளை, தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, காலை, 6:00 மணிக்கு, தீபாராதனையும், 6:30 மணிக்கு, அகவல் பாராயணம், காலை, 7:30 மணிக்கு, சன்மார்க்க கொடி உயர்த்துதல், காலை, 9:00 மணிக்கு, திருஅருட்பா பாடல் இசை நிகழ்ச்சி மற்றும் ராமர் பஜனைக் குழுவினர் பக்தி பாடல்கள் பாடப்படுகின்றன. மதியம், 12:10 மணிக்கு, தைப்பூச ஜோதி தரிசனம், மாலை, 7:00 மணிக்கு, மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.