பதிவு செய்த நாள்
21
ஜன
2019
11:01
மதுரை: மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு, மாரியம்மன் தெப்பக்குளத்தில், அம்மனும், சுவாமியும், அலங்கார மிதவை சப்பரத்தில் இன்று எழுந்தருளுகின்றனர்.
இத்திருவிழாவின் கொடியேற்றம், ஜன., 9ல் நடந்தது. தினமும், பல்வேறு வாகனங்கள், தங்கச்சப்பரத்தில், அம்மன், சுவாமி, எழுந்தருளி, வீதி உலா வந்தனர்.முக்கிய நிகழ்வான, தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, வைகையில் கிணறு அமைத்து, மூன்று மாதங்களாக, தெப்பத்திற்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தற்போது தெப்பத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. மின் விளக்குகளால், தெப்பம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு, அம்மனும், சுவாமியும், அதிகாலை, 5:30 மணிக்கு எழுந்தருளி, சித்திரை வீதிகள், அம்மன் சன்னிதி, பாண்டியன் - மாலதி திருக்கண் மண்டகப்படியாகி, தெப்பக்குளம் சுற்றி, முக்தீஸ்வரர் கோவில் சேர்வர். பின், தெப்பத்தில், அலங்கார மிதவை சப்பரத்தில், அம்மனும், சுவாமியும் எழுந்தருளி, காலை, 10:05 மணிக்கு மேல், 10:29 மணிக்குள், இரு முறையும், இரவு, 8:00 மணிக்கு ஒரு முறையும், தெப்பத்தை வலம் வந்து, மைய மண்டபம் அடைவர்.விழா முடிந்து, சுவாமி, கோவில் சேரும் வரை, நடை சாத்தப்பட்டிருக்கும்.