பதிவு செய்த நாள்
21
ஜன
2019
12:01
நாமக்கல்: தை முதல் ஞாயிறை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, ௧,௦௦௮ லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.நாமக்கல்லில், ஒரே கல்லினால் உருவாக்கப்பட்ட, 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. தை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, சுவாமிக்கு, வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து நல்லெண்ணெய், சீயக்காய்த்துாள், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.