திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2019 01:01
திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் தேர் வெள்ளோட்டம் நடந்தது. திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான இக்கோயில் தேர் சிறியதாக இருந்ததால், பெரிய தேராக செய்ய முடிவு செய்யப்பட்டது. பனிரண்டரை கிராம மக்கள் ஒத்துழைப்புடன் 60 லட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கபட்டது. காலை 10:45 மணிக்கு தேர் வெள்ளோட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் மணிகண்டன் வருகைக்காக காத்திருந்தனர். தேர் வெள்ளோட்டம் தாமதமாக காலை 11:30 மணிக்கு துவங்கியது.
ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது.11:50 மணிக்கு தாமதமாக வந்த அமைச்சர் மணிகண்டன் தேர் வெள்ளோட்டோத்தில் பங்கேற்றார். முன்னதாக பாகம்பிரியாள் தாயாருக்கு சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன. 2:00 மணிக்கு தேர் நிலைக்கு சென்ற டைந்தது. தேரோட்ட விழாவில் சிவகங்கை தேவஸ்தான அறங்காவலர் மதுராந்தக நாச்சியார், காரைக்குடி தொகுதி கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் தென்னவன், தேவஸ்தான கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன்,தொண்டி சரவணா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் சரவணன்,அந்தமான் ராஜேந்திரா டிரேடர்ஸ் உரிமையாளர் சுப்பிரமணியன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.