குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் தைப்பூச தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2019 01:01
காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் தைப்பூச விழா ஜன., 12 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு 8:00 மணிக்கு சுவாமி வெள்ளி கேடகம், தங்கரதம், வெள்ளி ரதத்தில் வீதி உலா வந்தார். நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 5:15 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜை நடந்தது. மாலை 4:05 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து, மாலை 5:30 மணிக்கு நிலையை அடைந்தது. இன்று காலை 10:00 மணிக்கு வேள்ளி கேடகத்தில் வீதி உலாவும், மதியம் 1:45 மணிக்கு தேனாற்றில் தீர்த்தமாடும் நிகழ்ச்சியும், இரவு 7:00 மணிக்கு தீபாராதனையும் நடக்கின்றன. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் செய்தார்.