பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்க குவிந்த மலை வாழைப்பழங்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2019 01:01
பழநி : பழநி தைசப்பூசவிழாற்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயார் செய்வதற்காக மலை வாழைப்பழங்கள் டன் கணக்கில் குவிக்கப்பட்டுள்ளது. வரத்து இல்லாததால் விலை உயர்ந்துள்ளது. தைப்பூசவிழாவை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரைப் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குழுவினராக வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயார் செய்ய மலை வாழைப்பழம், கற்பூரவள்ளி போன்ற வாழைப்பழங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக இவ்வாண்டு கர்நாடக மாநிலம் குடகு மலைப்பழம், பாச்சலுார், சிறுமலை, பன்றிமலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் மலை வாழைப்பழங்கள் டன் கணக்கில் பழநிக்கு வந்துள்ளன. கடந்த ஆண்டு வரத்து அதிகரிப்பு காரணமாக ஒரு பழம் ரூ.5 முதல் ரூ.7 வரை விற்றது.
வரத்து குறைவு:இந்த ஆண்டு வரத்து குறைந்ததால் ஒரு பழம் ரூ.10 வரை விற்கப்படுகிறது. போதிய மழை இல்லாததால் வரத்து குறைந்துள்ளது. வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு தைப்பூசத்தையொட்டி 60 டன் வரை வாழைப்பழங்கள் விற்பனைக்கு வந்தன. இம்முறை மொத்தமே 30 டன் தான் வந்துள்ளது. தரத்திற்கு தகுந்த மாதிரி ஒரு பழம் ரூ.6 முதல் ரூ.10க்கு விற்கிறோம். விற்பனை சுமார் தான் என்றனர்.