திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின் உபகோவில்களில் ஒன்றாக, கிரிவலப் பாதையில், திருமலை சொக்கம்மன் கோவில் உள்ளது.பவுர்ணமி, பிரதோஷ நாட்களில் கிரிவலம் வருவோர், மலை மீது அமைந்துள்ள இக்கோவிலில் வழிபட்டு செல்வர்.நேற்று, தைப்பூசம் மற்றும் பவுர்ணமியை ஒட்டி, சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.இதில், திருமலை சொக்கம்மன், ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.விழா ஏற்பாடுகளை, கோவில் அர்ச்சகர் ராஜேந்திரன் செய்திருந்தார்.