பதிவு செய்த நாள்
23
ஜன
2019
11:01
பழநி: பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு, பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், பல்வேறு வகையான காவடிகளுடன் குவிந்த வண்ணம் உள்ளனர். நாளை பெரியநாயகியம்மன்கோயில் தெப்போற்ஸவம் நடக்கிறது.
பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசவிழா ஜன.,15ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஜன.,24வரை நடக்கிறது. விழாவில் முத்துக்குமராசுவாமி, வள்ளி, தெய்வானை காலையில் சப்பரத்திலும், இரவு வெள்ளிக் காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, உள்ளிட்ட வாகனங்களில் திருவுலா வருகிறார். ஜன.,20ல் திருக்கல்யாணமும், நேற்றுமுன்தினம் தைப்பூச தேரோட்டம் நடந்தது.நேற்று மதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடங்கள், காவடிகள் எடுத்தும் ஆட்டம், பாட்டத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு தங்கக் குதிரை வாகனத்தில் முத்துக் குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார். நாளை தெப்போற்ஸவம்விழாவில் இன்று இரவு பெரிய தங்கமயில் வாகனத்தில் சுவாமி ரதவீதியில் திருவுலா நடக்கிறது. நாளை (ஜன.,24ல்) இரவு தேரடி தெப்பக்குளத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ள,தெய்வானை தெப்போற்ஸவவிழா நடக்கிறது. அதன்பின் பெரியநாயகியம்மன் கோயிலில் கொடி இறக்குதலுடன் தைப்பூசவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.