Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மம்சாபுரத்தில் புனித செபஸ்தியார் ... குளித்தலை, கடம்பர்கோவிலில், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் தங்கைக்கு சீர்வரிசை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2019
01:01

திருச்சி: திருச்சி, சமயபுரம் மாரியம்மனை, ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் தங்கையாக பாவித்து, பக்தர்கள் வழிபடுகின்றனர். இது தவிர, ஸ்ரீரங்கம் கோவிலின் சார்பு கோவிலாகவும் சமயபுரம் கோவில் இருந்ததால், ஆண்டுதோறும் தைப்பூச நாளில் கொள்ளிடம் ஆற்றுக்கு தீர்த்தவாரி கண்டருள வரும் சமயபுரம் மாரியம்மனுக்கு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டுப்புடவை, மாலைகள் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்படும்.

Default Image
Next News

அதன்படி, நேற்று முன்தினம், சமயபுரம் கோவிலில் இருந்து, கண்ணாடி பல்லக்கில் புறப்பட்ட சமயபுரம் மாரியம்மன், நொச்சியம் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி, ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் கொள்ளிடம் கரையில் எழுந்தருளினார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்காரப் பந்தலில் எழுந்தருளி, மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளினார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர்கள், அதிகாரிகள், ஸ்தலத்தார்கள் பட்டுப்புடவை, மாலைகள், மஞ்சள், சந்தனம், வளையல் உள்ளிட்ட மங்களப் பொருட்களை வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ரெங்கநாதர் கோவில் வடக்கு வாசல் வழியாக, அலங்காரப் பந்தலுக்கு சென்றனர். அங்கு சமயபுரம் கோவில் இணை ஆணையர் குமாரதுரை மற்றும் கோவில் அலுவலர்களிடம், சீர்வரிசைப் பொருட்களை வழங்கினர். ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டாடைகள் மற்றும் மாலைகளை மாரியம்மனுக்கு அணிவித்து தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar