கோவை:புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில், பிரதிஷ்டை விழா நடந்தது.கோவை தேவேந்திர குல சமூகத்தினர் சார்பில், புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில், பிரதிஷ்டை விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை, 7:00 மணிக்கு, சிறப்பு யாகம் நடந்தது. அபிஷேகத்தை தொடர்ந்து, அருகம்புல் அலங்காரத்தில், முந்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் வழிபட்டனர்.