வானுார்: திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் ராகு கால சிறப்பு பூஜை நடந்தது. வானுார் அருகே திருவக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திரமவுலீவரர் வக்ரகாளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை வாராந்திர ராகுகால சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து காலை வக்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் சந்தன காப்பு அலங்காரமும், மாலை 4.30 மணிக்கு ராகுகால சிறப்பு பூஜை நடந்தது.