Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மைய மண்டபத்தை புதுப்பிக்க மீண்டும் ... காரமடை அரங்கநாதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியமாரியம்மன் கோவில் திருவிழா: பந்தல் முகூர்த்தக்கால் நடும் விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2012
11:02

ஈரோடு: ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் நடப்பாண்டு திருவிழாவிற்காக, பந்தல் அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நேற்று நடப்பட்டது.
ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன் பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சிறப்பு வாய்ந்த இக்கோவில், அறநிலையத் துறைக்கு அதிக வருவாய் தரக்கூடியது. நடப்பாண்டு கோவில் குண்டம், தேர்த்திருவிழா, மார்ச் 20ம் தேதி துவங்கி, ஏப்ரல் 8ம் தேதி வரை நடக்கிறது. திருவிழாவுக்காக கோவில் முன், பிரப் ரோட்டில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நேற்று துவங்கியது. கோவில் செயல் அலுவலர் சுப்பிரமணியம் முன்னிலையில், அறநிலையத் துறை உதவி ஆணையர் தனபால் கலந்துகொண்டு, நேற்று காலை 10 மணிக்கு, பந்தல் அமைப்பதற்கான முகூர்த்தகாலை நட்டார். மார்ச் 20ம் தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்குகிறது. மார்ச் 24ம் தேதி இரவு 8.30 மணிக்கு பட்டாளம்மன் அபிஷேகத்துடன் கம்பம் நடும் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 28ம் தேதி கிராம சாந்தி, மார்ச் 29ம் தேதி கொடியேற்றம், ஏப்ரல் 3ம் தேதி அதிகாலை 5 மணிக்கு காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா, மாவிளக்கு மற்றும் கரகம் எடுத்து வரப்படும். ஏப்ரல் 4ம் தேதி காலை பொங்கலும், மாலை தேர் வடம் பிடித்தல், ஏப்ரல் 5ம் தேதி மாலை பெரிய மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதி உலாவும், ஏப்ரல் 6ம் தேதி சின்ன மாரியம்மன் மற்றும் வாய்க்கால் மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதி வலம் நடக்கிறது. ஏப்ரல் 7ம் தேதி மதியம் 3 மணிக்கு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. ஏப்ரல் 8ம் தேதி காலை 10 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனை வழிபட உகந்த நாட்களில் சஷ்டி விரதம் முக்கியமானதாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: ‘‘தர்மத்தின் வழியில் கிடைக்கும் சந்தோஷமே நிரந்தரம்,’’ என, மதுரையில் தினமலர் நாளிதழ் இணை ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த கோரிக்கை ... மேலும்
 
temple news
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயில் விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தி விழா ... மேலும்
 
temple news
கம்பம்: கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி கவுமாரியம்மன் கோயில் திருப்பணிகளை, எம்.பி. தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar