பதிவு செய்த நாள்
29
ஜன
2019
12:01
தலைவாசல்: தலைவாசல், ஆறகளூர் கிராமத்தில் காமநாதீஸ்வரர் கோவிலில், அஷ்ட பைரவர் ஆலயம் அமைந்துள்ளது. தை மாத தேய்பிறை அஷ்டமி, தேவாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, நேற்று காலை பால், தயிர் உள்ளிட்ட ஐந்து வகை பொருட்களால், மூலவருக்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. ஐந்து வகை எண்ணெய்களால், பஞ்ச தீபம் ஏற்றியும், பைரவருக்கு உகந்த செவ்வரளிப்பூவை வைத்தும் பக்தர்கள் வழிபட்டனர். ஆலயத்தில் வீற்றிருக்கும், எட்டு பைரவர்களுக்கு தனித்தனியாக சிறப்பு வழிபாடு நடந்தது. காமநாதீஸ்வரர், பெரிய நாயகி அம்மன் ஆகியோர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மஹா தீபாராதனை, யாகங்களில் ஏராளமான பக்தர்கள் பைரவர் அருள் பெற்றனர். ஆண்டின் முதல் தேய்பிறை அஷ்டமி என்பதால், பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.