Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! காமாட்சியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொளாநல்லி சிவன் கோவிலில் திருப்பணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2012
10:02

ஈரோடு : கருமாண்டாம்பாளையம் கொளாநல்லியில் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பாம்பலங்காரர் கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது. கோவில் திருப்பணிக்காகவும், கும்பாபிஷேகத்துக்கும், 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பல்வேறு கோவில்கள், கும்பாபிஷேகம் காணாத நிலையில், சிதிலமடைந்து காணப்படுகிறது. இதில் கருமாண்டபாளையம், கொளாநல்லி, பாம்பலங்காரர் ஸ்வாமி கோவிலும் ஒன்று. 500 ஆண்டுகள் பழமையான இக்கோவில் இயற்கை எழிலுடனும், ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது. அப்பகுதியிலேயே மிகவும் தொன்மையான கோவில் என்பதால், தினமும் பக்தர்கள் பலர் பாம்பலங்காரரான சிவனை வழிபட்டு செல்கின்றனர். இந்தியாவிலேயே இரட்டை நந்தியை கொண்ட ஒரே சிவன் கோவிலாக, கொளாநல்லி பாம்பலங்காரர் கோவில் உள்ளது. ஒரு காலத்தில் வசூல் கொட்டிய இக்கோவிலை, 1969ம் ஆண்டு அறநிலையத்துறையின் கீழ் செயல்பட அரசு உத்தரவிட்டது. கடந்த பல ஆண்டாக இக்கோவிலை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், சிதிலமடைந்து காணப்பட்டது. இதுபற்றி, "காலைக்கதிர் நாளிதழில் ஜன., 11ம் தேதி செய்தி வெளியானது. தற்போது, இக்கோவிலில் திருப்பணிகள் துவங்கியுள்ளது. திருப்பணி, கும்பாபிஷேகத்துக்காக, 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், ""கொளாநல்லி பாம்பலங்காரர் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள, ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கோவில் கோபுரங்கள் அனைத்தும் இடித்து, புதிய கோபுரங்களை அமைக்கப்படும். கோவிலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். பணிகள் முடிந்ததும் கும்பாபிஷேகம் மேற்கொள்ளப்படும். பணிகளின் முடிவில் நிதி பற்றாக்குறை குறித்து, அரசுக்கு பரிந்துரை அனுப்பப்படும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
சென்னை : தமிழகத்தில் வரும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில், நேற்று ரோடு ஷோ நடத்தி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட, த.வெ.க., தலைவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar