திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று (பிப்.2ல்) சனி மகா பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற்றது.
சனி பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பெருமானுக்கு பால் மற்றும் சந்தனம் உள்பட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யபட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பத்கர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.