சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே சிவகங்கை சமஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள சிவபுரிபட்டி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.இதையொட்டி நேற்று மாலை 4:30 மணிக்கு கோயில் முன் உள்ள நந்தீஸ்வரருக்கு மஞ்சள், திருநீரு, பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து நந்திதேவருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி பிரியாவிடையுடன் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலிலும், சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயிலிலும் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.