Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரராகவர் கோவிலில் முன்னோருக்கு ... சென்னிமலை முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடற்கரையில் ஸ்தலசயன பெருமாள் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2019
12:02

மாமல்லபுரம்:மாமல்லபுரம் கடற்கரையில், மஹோதய தீர்த்தவாரிக்காக, ஸ்தலசயன பெருமாள், கடலில் புனித நீராடினார்.இந்து மத, வைணவ வழிபாட்டில், மஹோதய உற்சவம் குறிப்பிடத்தக்கது. தை மாத, அமாவாசை, திங்களன்று, திருவோண நட்சத்திர நாளாக அமைவது, மஹோதய நாள்.இந்நாளில், புனித நீர் நிலைகளில் நீராடி, நம் முன்னோர்க்கு, தர்ப்பணம் செய்து, அவர்களின் ஆசி பெறுவது, ஹிந்துக்களுக்கு வழக்கம். இந்நாளான நேற்று, புனித நீர்நிலையாக விளங்கும், மாமல்ல புரம் கடற்பகுதியில், சுவாமி புனித நீராடினார்.ஸ்தலசயன பெருமாள் கோவிலில், காலை வழிபாட்டைத் தொடர்ந்து, ஸ்தலசயன பெருமாள், பூதத்தாழ்வார், வாகன மண்டபத்தில் எழுந்தருளினர்.தொல்லியல் வளாக, ஆதிவராக பெருமாளும், அங்கு எழுந்தருளி, கருட வாகனங்களில் சேவையாற்றினர். அதைத்தொடர்ந்து, கோவிலிலிருந்து, காலை, 7:15 மணிக்கு புறப்பட்டனர்.பூதத்தாழ்வாரை நோக்கிய தரிசனத்துடன், ஸ்தலசயன பெருமாள் செல்ல, ஆதிவராக பெருமாள், அவரைத் தொடர்ந்து சென்று, கடற்கரையை அடைந்தனர். அவர்களின் அம்சமான, சக்காரத்தாழ்வாருக்கு, வேத பாராயண, திருமஞ்சனம் நடைபெற்றது.தொடர்ந்து, காலை, 8:50 மணிக்கு, சக்கரத்தாழ்வார்கள், கடலில் புனித நீராடினர். ஸ்ரீரங்கம், பவுண்டரீகபுரம் ஆண்டவர் சுவாமிகள், பக்தர்கள் புனித நீராடினர்.இணை ஆணையர் அசோக்குமார், செயல் அலுவலர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: மாடூர் டோல்கேட் அருகே நிறைமதி சாலையில் உள்ள பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில், ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார், கூத்தப்பாக்கம் சர்வசக்தி விநாயகர் கோவிலில் முதலாமாண்டு பூர்த்தி சிறப்பு பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar