பதிவு செய்த நாள்
05
பிப்
2019
02:02
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பிரத்தியங்கராதேவிக்கு, தை மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது.
நடுவீரப்பட்டு நரியன் ஓடை கரையில் உள்ள பாதாள காளி மற்றும் பிரத்தியங்கார தேவி கோவிலில், நேற்று(பிப்., 4ல்), தை மாத அமாவாசையை முன்னிட்டு, நிகும்பலா யாகம் நடந்தது. பூஜையை முன்னிட்டு, நேற்று (பிப்., 4ல்) மதியம் 12:00 மணிக்கு, பிரத்தியங்கரா தேவி மண்டபத்தில் கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு, யாக வேள்விகள் ஆரம்பிக்கப்பட்டது.மதியம் 1:30 மணிக்கு யாகத்தில் மிளகாய் வற்றல்கள் கொட்டப்பட்டு நிகும்பலா யாகம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடந்து, யாக வேள்வியில் வைக்கப்பட்ட கலசம் கோவில் உலாவாக வந்து, பிரத்தியங்கராதேவிக்கு கலச அபிஷேகம் நடந்தது. மதியம் 2:00 மணிக்கு பாதாள காளிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து 2:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.